Skip to main content

Posts

பொறியியல் துறையில் கணிதத்தின் முக்கியத்துவம்

Recent posts

இந்தியசுடர் செய்திமடல்

சமீபத்தில் நான் இந்தியசுடர் கல்வி அறக்கட்டளையின் செயல்பாடுகளை விவரிக்கும் செய்திமடலை தமிழில் தயாரித்தேன். இச்செய்திமடல் உங்கள்பார்வைக்கு... --> அன்புடையீர் , வணக்கம். இந்தியசுடர் கல்வி அறக்கட்டளைக்கு தாங்கள் அளித்துவரும் ஆதரவிற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். நம் அறக்கட்டளை 2010-2011 நிதியாண்டின் முதல் ஐந்து மாதங்களில் ( ஏப்ரல்- ஆகஸ்ட்) நிறைவேற்றிய கல்விசார் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகளின் தொகுப்புரையை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறோம். 158 புதிய உறுப்பினர்களுடன் இந்த நிதி யாண்டில் இந்தியசுட ரின் உறுப்பினர் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்துள்ளது. இந்தியசுடர் தற்போது தமிழகம் , கர்நாடகம் உள்ளிட்ட தென்மாநிலங்கள் மட்டுமி ன்றி மத்தியப்பிரதேசம் , ராஜஸ்தான் , மேற்கு வங்கம் மற்றும் மணிப்பூர் உள்ளிட்ட வடமாநிலங்களிலும் கல்விப்பணி செய்து வருகிறது. கல்வி ஒன்று மட்டுமே பின்தங்கிய மக்கள் ஏ ற்றம் பெற வழிவகுக்கும் ; தரமான கல்விதான் தனிமனிதன் முழுமைத்துவம் அடைய உதவும் என்ற சீரிய நோக்கில் இந்தியசுடர் திரட்டும் அனைத்து நன்கொடைகளும் கல்வியில் பி

நான் ரசித்த கவிதைகள் /துணுக்குகள் சில

"பூபாளத்திற்கொரு புல்லாங்குழலில்"  வெ . இறையன்பு IAS காக்கா - கவிஞன் காகமே ! மயிலையும் குயிலையும் மணிக்கணக்காய் எத்தனையோ புலவர்கள் பாட அதிகமாய் பாடாத உன்னை நான் பாடுகிறேன் பறவைகளில் நீ கறுப்பு என்பதால் பாடாமல் விட்டார்களா ? குயில் கூட கறுப்புதான் ஆனால் அதன் கறுப்பில் கூட பளபளப்பு எனவே தான் பாடிவிட்டார்கள் போலும் . ஆகாயத் தோட்டியை அழுக்குகளை அப்புறப்படுத்தும் உன்னை எப்படியெல்லம் அவமானப்படுத்துகிறோம் ?. காக்காய்க் குளியலெனவும் காக்காய்ப் பிடிப்பதெனவும் காக்காய் வலிப்பதெனவும் காரணமில்லாமல் உன்னை வைகின்றனர் வையகத்தார் . குறும்புக்காரக் குயில்களுக்கு நீ தானே அடைகாக்கும் ஆதரவான செவிலித்தாய் அகத்தியன் கமன்டலத்தை அன்று நீ கவிழ்த்தியிருக்காவிட்டால் காவிரி ஏது ? கல்லனை ஏது ?. கவிழ்த்ததே கவிழ்த்தாயே தமிழக எல்லையில் கவிழ்த்திருக்கக் கூடாதா ! எனச் சிலர் கவலைப்படுகிறார்கள் . கூடிவாழும் குணத்தை மனித்னுக்கு போதிக்க எத்தனை முறை முயன்றும் நீ ஏமாந்தே போனாய் . இனத்துக்குள் சண்டையிடும் இழிந்த